ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை கொண்டு வரப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 30ம் தேதி சென்னை யில் மிகப்பெரிய அளவில் தார்சட்டி எடுத்து இந்தி மொழியை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார். கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு குறித்து பிரச்சார பெரும் பயண விளக்க கூட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்த பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி விலைவாசியை குறைப்போம், 15 லட்சம் கொடுப்போம் என்றார். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து இருக்கின்றது. தேர்தல் வரும் போது மட்டும்... விரிவாக படிக்க >>