தஞ்சை தேர் விபத்து: அதிமுக ரூ.1 லட்சம் நிவாரணம்!



தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog