Posts

மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு எடுத்த திடீர் முடிவு?

Image
மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு எடுத்த திடீர் முடிவு? கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு திடீரென்று விளக்கம் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு - அதிகாரிகள் தகவல்! இந்நிலையில், சீனாவின் மற்றொரு பெரிய நகரமான ஷாங்காயிலும், கடந்த மூன்று நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை மையம்

Image
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை மையம் வெப்பசலனம் காரணம் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  இன்று (மார்ச் 23)தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.03.2022, 25.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.03.2022, 27.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை: 23.03.2022, 24.03.2022: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். Also read :  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது - அமைச்சர் பிடிஆர் திட்டவட்டம் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்…! சோகத்தில் ரசிகர்கள்…!

Image
முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்…! சோகத்தில் ரசிகர்கள்…! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது. சீரியல் குழுவினர் இறுதி நாளில் எடுத்துக் கொண்ட படம் இதனை உறுதி செய்துள்ளது. அதிர்ச்சியாக வேண்டாம் தெலுங்கில் ’ வதினம்மா ’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா , வெங்கட் ரங்கநாதன் , ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்….! அப்போ தரமான சம்பவம் இருக்கு…! 4 சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் பாச நிகழ்வுகள், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசி குடும்பத்தை கலகலப்பாக்குவது என சராசரி கூட்டு குடும்பத்தில் நடக்கும்

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - Mon-Fri 7:00 PM - Promo - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - Mon-Fri 7:00 PM - Promo - Zee Tamil

ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

Image
ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா? திருப்பதி தேவஸ்தானம் தகவல்! ஒரு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதனை அடுத்து நேற்றும் இன்றும் தரிசன டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யபப்ட்ட நிலையில் ஒரு மணி நேரத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஏராளமானோர் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் எடுக்க முன்வந்ததாகவும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மணி நேரத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.   Spread the love

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை? பரவுவதை தடுக்க தடுப்பூசி அவசியம்!!

Image
இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை? பரவுவதை தடுக்க தடுப்பூசி அவசியம்!! தற்போது நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாட்டு விதிகளும் மெல்லமெல்ல திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் மக்களின் இயல்பான வாழ்க்கை மீண்டும் திரும்பி உள்ளதாகவும் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சில வாரங்களுக்கு முன்பு கான்பூர் ஐஐடி ஜூன் மாத இறுதியில் கொரோனாவின் நான்காவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் அதிதீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்  தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வர இருக்கின்ற நான்காம் அலையை தடுக்க தடுப்பூசி கட்டாயம் அவசியம் என்று கூறினார். இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் கொரோனாவின் நாலாவது அலை ஏற்படும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் நா

காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

Image
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு இதையும் படிங்க ஆசிரியர் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. டென்ஜான்சிகாவுக்கு நேற்று இரவு காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் குழந்தையை மாற்றினர். ஆயினும் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியவாலைக்கு கொண்டு செல்ல முன்னரே உயிரிழந்துள்ளது. மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். இதையும் படிங்க தொடர்புச் செய்திகள் ஆசிரியர் ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் மேலும் பதிவுகள் பிந்திய செய்திகள்